நாஸ்தி1 பு3த்3தி4ரயுக்1த1ஸ்ய ந சா1யுக்1த1ஸ்ய பா4வனா |
ந சா1பா4வயத1: ஶான்தி1ரஶான்த1ஸ்ய கு1த1: ஸுக2ம் ||66||
ந—--இல்லை; அஸ்தி—--ஆகும்; புத்திஹி---புத்தி; அயுக்தஸ்ய—--இணைக்காதவனுக்கு; ந----இல்லை; ச—--மற்றும்; அயுக்தஸ்ய—-இணைக்காதவனுக்கு; பாவனா—--சிந்தனை; ந—--இல்லை; ச—--மற்றும்; அபாவயதஹ— --சிந்தனை அற்றவனுக்கு; ஶான்திஹி—--அமைதி; அஶான்தஸ்ய—-- அமைதி அற்றவனுக்கு; குதஹ----எங்கு; ஸுகம்--- மகிழ்ச்சி
BG 2.66: ஆனால் மனதையும் புலன்களையும் கட்டுப்படுத்தாத ஒழுக்கமற்ற ஒருவரால் உறுதியான புத்தியோ அல்லது நிலையான சிந்தனையோ கடவுள் மீது இருக்க முடியாது. கடவுளோடு மனதை ஒருக்காலும் இணைக்காதவனுக்கு அமைதி இல்லை; அமைதி இல்லாதவர் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்?
Start your day with a nugget of timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!
இந்த வசனம் முந்தைய வசனத்தின் முடிவை மறுபக்கத்தைக் கூறி மறுதலிப்பதன் மூலம் வலுப்படுத்துகிறது. முன்பு, ஸ்ரீ கிருஷ்ணர் ‘கடவுளை அறிக; அமைதியை அறிந்து கொள்’ என்று கூறினார். இந்த வசனத்தில், ‘கடவுள் இல்லை; அமைதி இல்லை’ என்று கூறுகிறார். மனதையும் புலன்களையும் ஒழுங்குபடுத்தக் கற்றுக்கொள்ளாத ஒருவரால் கடவுளைத் தியானிக்கவோ, அவருடைய தெய்வீக ஆனந்தத்தை அனுபவிக்கவோ முடியாது. உயர்ந்த சுவை இல்லாமல், தாழ்ந்த சுவையைத் துறப்பது சாத்தியமில்லை, அத்தகைய நபர் பூவின் அமிர்தத்தைத் துறக்க முடியாத தேனீயைப் போல பொருள் மகிழ்ச்சிக்காக ஏங்குகிறார்:
ராத்1ரிர்க3மிஷ்யதி 1 ப4விஷ்யதி1 ஸுப்1ரபா4த1ம்
பா4ஸ்வாநுத்3வேஷ்யதி1 ஹஸிஷ்யதி 1 ப1ங்க1ஜஶ்ரீஹீ
ஏவம் விசி 1ந்த1யதி1 கோ1ஷ க3தே1 த்1விரேஃபே2
ஹா ஹந்த1 ஹந்த1 நளினீம் க1ஜ உஜ்ஜஹார (ஸுக்தி1 ஸுதா4க1ர்)
ஸமஸ்கிருத இலக்கியத்தில் பிரபலமான இந்த வசனம் ஒரு தேனீயின் கதையை தொடர்புபடுத்துகிறது. தேனீ தாமரை மலரில் அமர்ந்து அதன் தேனை அருந்திக் கொண்டிருந்தது. சூரியன் மறையத் தொடங்கியதும், பூவின் இதழ்கள் மூட ஆரம்பித்தன. ஆனால் தேனீ தனது புலன்களின் பொருளை அனுபவிப்பதில் மிகவும் இணைந்திருந்தது, அது பறக்க மறுத்தது. அது நினைத்தது, ‘பூ மூடுவதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. ஆகையால் இன்னும் கொஞ்சம் தேன் உறிஞ்சலாம்.’ அதே மாதிரி, முதுமையும் மரணத்தின் நிச்சயமான அறிகுறியாக வருவதை காணலாம், ஆனால் தேனீயைப் போல நாம் உலக இன்பங்களை அனுபவிப்பதில் மூழ்கி இருக்கிறோம்.
இதற்கிடையில், இருட்டாகி, தாமரை மலர் மூடப்பட்டு தேனி தாமரை பூவினில் அகப்பட்டது. அது நினைத்தது, ‘பரவாயில்லை! இன்றிரவு என் அன்பான மலரின் உள்ளே இருப்பேன். நாளை காலை, அதன் இதழ்கள் மீண்டும் திறக்கும் போது, நான் பறந்து செல்வேன்.’ கா1ஷ்ட2 பே4தோ3 நிபு1ணோபி ஸங்க்1ரிஹி கு1ந்டி2தோ1 ப4வதி1 பத்3ம விபே4த3 ‘‘ஒரு தேனீக்கு மரத்தை வெட்டி எடுக்கும் ஆற்றல் உண்டு. ஆனால், மரத்தை வெட்டக்கூடிய தேனீயின், தாமரையின் மென்மையான இதழ்களுக்குள் சிக்கியிருக்கும் உணர்வுப் பொருட்களின் மீதான பற்றுதலைப் பாருங்கள்.’ சிறிது நேரம் கழித்து, ஒரு யானை வந்து, தண்டிலிருந்து தாமரையை உடைத்து, அதை விழுங்கியது. தாமரையுடன் தேனீயும் யானையின் வயிற்றுக்குள் சென்றது. ‘என் அன்பான தாமரை எங்கேயோ போகிறது, நானும் சந்தோஷமாக அதனுடன் செல்கிறேன்’ என்று தேனீ நினைத்துக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் அது இறந்துவிட்டது.
அதுபோலவே, மனிதர்களாகிய நாமும் புலன்களின் திருப்தியில் மூழ்கி இருக்கிறோம், கடவுள் பக்தியில் ஈடுபட அறிவுரைக்கும் துறவிகளின் செய்தியைக் கவனிக்கவில்லை. இறுதியில், மரணத்தின் வடிவத்தில் காலம் நம்மை முந்துகிறது. புலன்களை ஒழுங்குபடுத்தி பக்தியில் ஈடுபடாதவர்கள் மாயாவின் மும்மடங்கு துன்பங்களால் தொடர்ந்து உலுக்கப்படுகிறார்கள் என்று ஸ்ரீ கிருஷ்ணர் இங்கே கூறுகிறார். பொருள் ஆசைகள் அரிக்கும் தோலழற்சி போன்றது, மேலும் அவற்றில் நாம் எவ்வளவு அதிகமாக ஈடுபடுகிறோமோ அவ்வளவு மோசமாகிவிடும். இந்த பொருள் இன்ப நிலையில் நாம் எப்படி உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்க முடியும்?